search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோக்களில் இருந்த பொருட்கள் திருட்டு"

    நெல்லிக்குப்பத்தில் 3 ஆட்டோக்களில் இருந்த ரூ.16 ஆயிரம் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜ், சோழவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி, வச்சீராந்த் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.

    இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் இந்த 3 ஆட்டோக்களிலும் உள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த 2 செல்போன்கள், விலை உயர்ந்த 3 கைகடிகாரங்கள், மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இன்று காலையில் கண்விழித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் ஆட்டோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×