என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆட்டோக்களில் இருந்த பொருட்கள் திருட்டு
நீங்கள் தேடியது "ஆட்டோக்களில் இருந்த பொருட்கள் திருட்டு"
நெல்லிக்குப்பத்தில் 3 ஆட்டோக்களில் இருந்த ரூ.16 ஆயிரம் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜ், சோழவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி, வச்சீராந்த் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.
இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் இந்த 3 ஆட்டோக்களிலும் உள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த 2 செல்போன்கள், விலை உயர்ந்த 3 கைகடிகாரங்கள், மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலையில் கண்விழித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் ஆட்டோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X